Thursday 13 November 2014

எஸ்.ஆர்.எம்.குரூப் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் கால் ஊன்றவில்லை என்றும் இது பற்றி கண்டனம் தெரிவித்த தமிழ் ஆர்வலர்களை கண்டித்து அதன் பதிவாளர் கொடுத்த அறிக்கை வடிகட்டிய பொய்

சகோதரர் இம்மானுவேல் கல்வி கொள்ளை பற்றி எழுதுவதில்; உண்மை உண்டு. அதாவது இங்கு அரசியல்வாதி, அதிகாரிகள், நீதித்துறை, அடியாட்கள் என எஸ்.ஆர்.எம்.பச்சைமுத்துவின் அதிகாரம் விரிந்து பரந்துள்ளது. உண்மை. ஆனால் பச்சைதமிழரான அதுவும் வருங்காலத்தில் தமிழக முதல்வராக வர வேண்டும். பல்கலைக்கழத்திற்கு மட்டும் வேந்தர் அல்ல. தமிழகத்திற்கே வேந்தர் என காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பச்சை முத்து என்ற பெயரை பாரிவேந்தர் என மாற்றிய பச்சை தமிழர் பச்சைமுத்து தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் பல்கலைக்கழகம் ஆரம்பித்தார் என கூறுவது ஆதாரம் இல்லாத கூற்றாக இருக்குமோ என ஒரு சந்தேகம் உள்ளது என்றும் 300 கோடி ரூபாய் நில ஆக்கிரமிப்பிற்கு ஆதாரமாக ரிட் மனு எண்ணை குறிப்பிட்டது போல் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் எஸ்.ஆர்.எம். காலோச்சுகிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்று கேட்டு அவ்வாறு அவர்கள் ஆரம்பிக்கவும் இல்லை. ஆரம்பிக்க முயற்சியும் செய்யவில்லை என பல்கலைக்கழக பதிவாளர் கொடுத்துள்ள பத்திரிக்கை செய்தியையும் கொடுத்திருந்தார். 


பச்சை தமிழர் என சகோதரர் கூறுவது உண்மைதான் என்றால் அவர் எப்படி தெலுங்கர் என சிறுபான்மை கல்வி நிறுவனமாக பதிவு செய்தார்?
இவர்களுக்கு வேலையே பொய் சொல்வதும் மக்களின் கவனத்தை பிறர் பக்கம் திருப்புவதற்காக உண்மைக்கு மாறான செய்திகளை மிகைப்படுத்தி எழுதுவதும் இதன் மூலம் இவர்கள் அடிக்கும் மெகா கல்வி கொள்ளை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பதும் தான். இந்த கொள்ளை கும்பலின் மேற்கண்ட அறிக்கையை தாங்கள் வெளியிட்டுள்ளது. வரவேற்கதக்கது. ஆனால் நான் எழுதுவது எதுவும் ஆதாரம் இல்லாமல் இல்லை. என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இதோ கீழே கொழும்புவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிகழ்;ச்சியில் அங்குள்ள முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் போன்றோரை இவர்கள் வரவேற்று அழைத்து செல்லும் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இவை அனைத்தையும் இவர்கள் அடியாள் படையின் ஒரு அங்கமாக செயல்படும் புதிய தலைமுறை தொலைக்காட்சி உட்பட அனைத்து தொலைகாட்சிகளுக்கும் மின் அஞ்சல் மூலமாகவும் தினசரி அனுப்பி வருகிறேன். இது பற்றி எது எதற்கோ விவாதமேடை என நடத்தும் புதிய தலைமுறை இந்த கல்வி கொள்ளை பற்றியும்;, கொழும்புவில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது உண்மையா, இல்லையா என்பது பற்றியும் ஒரு விவாதம் வைக்கலாமே? நானே எனது நண்பர்கள் மூவரோடு சேர்ந்து அந்த விவாத மேடையில் கலந்து கொண்டு அனைத்து ஆவணங்களையும் காட்டி விவாதிக்க தயார். எனது ஒரே கோரிக்கை நான் காட்டும் ஆவணங்கள் மற்றும் நான் பேசும் செய்திகள் எடிட் செய்யப் படாமல் தொலைக்காட்சியில் வெளியிடப் பட வேண்டும் என்பது தான். நான் குறிப்பிடுவதில் உண்மையில்லை என்றால் எந்த சட்டபூர்வ நடவடிக்கைக்கும் நான் தயார். இதற்கு புதிய தலைமுறையும் தமிழக முதல்வர் கனவில் உள்ள பச்சைமுத்துவும் தயாரா?
கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள். மேலும் தேவை என்றால் கீழ்கண்ட இணைய தளத்தையும் பாருங்கள். இதுவே இவர்கள் கூறுவது எதுவுமே உண்மையல்ல என்பதை நிரூபிக்கும்.
http://kalakakkural.blogspot.in/2012/07/blog-post_17.html





முதல்மந்திரி ரிஷாத்தை வரவேற்கும் பொன்னவைக்கோ,துணைவேந்தர், SRM,பல்கலைக்கழகம்



                                           துவக்க விழா






    துவக்க விழா கும்மாளத்தின் பொழுது

No comments:

Post a Comment