அனுமதியற்ற கட்டிடத்தை காலி செய்ய வழக்கு தொடர்ந்தவர் கூட இந்த இனத்தில் நீதிமன்றத்தையும் நாடவில்லை. அரசு அதிகாரிகளையும் நாடவில்லை. பெருநகர வளர்ச்சி குழுமத்தில் கட்டிடம் கட்ட அனுமதி பெற வேண்டும் என்றால் அவர்கள் ஏராளமான ஆவணங்கள், அதாவது மூன்று தலைமுறைக்கு முன்பு கிரையம் கொடுத்த மூன்றாவது நபர்கள் பற்றி கூட ஆவணங்களை கேட்பார்கள், பட்டா, சிட்டா, அடங்கல் என ஆயிரம் ஆவணங்கள் கேட்பார்கள். அவர்கள் எவ்வாறு வீட்டு வசதி வாரிய நிலத்திற்கு மேற்கண்ட ஆவணங்களை பார்க்காமல் இந்த வள்ளியம்மாள் சொசைட்டி நடத்தும் ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரிக்கு அனுமதி கொடுத்தார்கள்.
அப்படியானால் நகர் ஊரமைப்பு துறை சட்டம் ஆளுக்கு ஆள் மாறுபடுமா? அந்த சட்டம் அப்பாவிகளை நசுக்குவதற்கு மட்டும் தானா?