Thursday 27 November 2014

கல்வி கொள்ளை 22

எஸ்.ஆர்.எம் குழுமத்தின் 319 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு பற்றி, நில அபகரிப்பு பிரிவு போலீசும் வழக்கு தொடரவில்லை. உண்மை உடனுக்குடன் என முழங்கி மக்களை மழுங்கடித்து மூளை சலவை செய்யும் புதிய தலைமுறையும் இது பற்றி பேசவில்லை.

இதற்கிடையில் ரகசியமாக திரு.பச்சமுத்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கண்ட நிலத்தை தனக்கே கிரையத்திற்கு தர வேண்டும் என வள்ளியம்மாள் சொசைட்டி பெயரில் ஒரு நீதிப்பேராணை மனு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அதன் செயலாளர், நிர்வாக இயக்குனர் மற்றும் நில ஆர்ஜித வட்டாட்சியர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்தார்.

ஏழைகளின் குடியிருப்புகளை எல்லாம் புல்டோசர் கொண்டு தரைமட்டம் ஆக்கும் மாநகராட்சியும் சரி, காலி செய்வதற்கு உடனுக்குடன் அறிவிப்பு அனுப்பும் நகர் ஊரமைப்பு துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவையும் இதில் வாய் மூடி மவுனியாக உள்ளது.

No comments:

Post a Comment